பெய்து வரும் பருவ மழையினால் யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் உள்ள சிவகுருநாதர் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அப்பகுதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மாணவர்கள் உட்பட பலர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட ஜே. 101 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குறித்த வீதிக்கு அருகில் யாழ்.இந்துக் கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளதால் நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வீதியில் பல நாட்களாக நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் வீதியில் பயணிக்கும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வழுக்கி விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த வீதியை உடனடியாக உரிய அதிகாரிகள் புனர்நிர்மாணிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.jpg)



