மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழவில்லை அது எங்கோ தரையிறங்கியிருக்க வேண்டும் என சர்வதேச விசாரணைக் குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் விமானம் கடலில் விழவில்லை என்று சர்வதேச விசாரணை குழு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கூறப்படுவதாவது
விமானத்தை இத்தனை நாட்கள் தேடியும் ஒரு பாகம் கூட கிடைக்காததால் அது வேறு எங்காவது தரையிறங்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இது தொடர்பாக தகவல் எதுவும் கிடைக்காவிட்டால் அடுத்த சில நாட்களில் விமானத்தை வேறு எங்கையாவது தேடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
அதே சமயம் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். விமானம் வேறு எங்காவது தரையிறங்கியிருக்கலாம் என்பது சாத்தியமில்லாத விஷயம் இல்லை.
ஏனென்றால் இதுவரை விமான பாகங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.
விமானத்தை 20க்கும் மேற்பட்ட நாடுகள் தேடிக் கொண்டிருக்கையில் அதை ஒரு குறிப்பிட்ட நாடு மறைத்து வைத்திருப்பதாகக் கூறுவது அபத்தம்.
விமானம் வேறு எங்காவது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியை முதலில் இருந்து துவங்கும் திட்டமும் உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக