வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு






யாழ்ப்பாணம், ஏப்.20
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகள் கழக மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  ஒரு மணிக்கு நடைபெறவுள்ளன.

கிராமிய விளையாட்டுக்களான பலூன் உடைத்தல், ஊசிக்கு நூல் கோர்த்தல், யோக்கற் சாப்பிடுதல், சாக்கு ஓட்டம், பணிஸ் சாப்பிடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், தலையணை சண்டை, யானைக்கு கண் வரைதல், குளம் கரை, முட்டி உடைத்தல், சங்கீத கதிரை, கயிறு இழுத்தல், கிளித்தட்டு, பிள்ளையார்ப் பேணிப் பந்து ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.

பிள்ளையார்ப் பேணிப் பந்து tவிளையாட்டு அன்றைய தினம் காலை 8 மணிக்கு நீராவியடி சிறுவர் கழக மைதானத்தில் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.(ஐ) 

0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.